மும்பை இந்தியன்ஸின் தோல்விக்கு காரணம் இதுதான்; தீபக் சஹார் கூறியதென்ன?
தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணத்தை மும்பை இந்தியன்ஸ் வீரர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.
தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணத்தை மும்பை இந்தியன்ஸ் வீரர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நேற்று (ஏப்ரல் 4) நடைபெற்ற ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டதாக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆடுகளம் மெதுவாக இருந்ததாக நினைக்கிறேன். டாஸ் மிகவும் முக்கியமானதாக இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் சற்று பனிப்பொழிவு இருந்ததால், டாஸ் மிகவும் முக்கியமானதாக இருந்தது. நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.
160 ரன்களுக்குள் தில்லி கேபிடல்ஸை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. 160 ரன்களுக்குள் அவர்களை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், நாங்கள் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க வேண்டும். அதனை செய்யத் தவறிவிட்டோம். சமீர் ரிஸ்வி நன்றாக விளையாடினார். 10 ஓவர்களுக்குள்ளாக அவரது விக்கெட்டினை வீழ்த்தியிருந்தால் ஆட்டம் சுவாரசியமாக இருந்திருக்கும் என்றார்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தில்லி கேபிடல்ஸ் அணிக்கு தனது அதிரடியான பேட்டிங் மூலம் வெற்றி பெற்றுத் தந்தார் சமீர் ரிஸ்வி. அதிரடியாக விளையாடிய அவர் 51 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.