பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
மிகுந்த வறுமைப்பட்டு இயலாதவராய்ச் செல்வம் உடையவரை அணுகித் தம் துன்பத்தை அவரிடம் பகிர்ந்து கொள்ள, அவரும் பதிலுக்கு உதவி செய்வது போல நம்பிக்கை ஊட்டி முடிவில் வந்தவர் விருப்பம் நிறைவேறாதவாறு அலைய
ஒற்கப்பட்டு ஆற்றார் உணர உரைத்தபின்,
நற்செய்கை செய்வார்போல் காட்டி, நசை அழுங்க,
வற்கென்ற செய்கை அதுவால் - அவ் வாயுறைப்
புல் கழுத்தில் யாத்து விடல். (பாடல்: 283)
மிகுந்த வறுமைப்பட்டு இயலாதவராய்ச் செல்வம் உடையவரை அணுகித் தம் துன்பத்தை அவரிடம் பகிர்ந்து கொள்ள, அவரும் பதிலுக்கு உதவி செய்வது போல நம்பிக்கை ஊட்டி முடிவில் வந்தவர் விருப்பம் நிறைவேறாதவாறு அலைய வைப்பது, ஆடு, மாடுகளுக்கு வாயில் தரவேண்டிய புல் முதலானவற்றைக் கழுத்தில் கட்டிவிடுவது போல் ஆகும்.