முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தம்முடைய பொருளை ஒருவரிடம் கடனாகக் கொடுத்துவிட்டுப் பெற்றவர் காலம் கடந்தும் கடனைத் திருப்பித் தாராது இருக்க, கொடுத்தவர் அவரிடம் சென்று கேட்டால், கடன் வாங்கியவர் சினந்து பேசக்கூடும்.

Updated On : 30 ஏப்ரல், 2023 at 4:48 PM
பகிர்:


கடம் கொண்ட ஒண் பொருளைக் கைவிட்டு இருப்பார்
இடம் கொண்டு, தம்மினே என்றால், தொடங்கிப்
பகை மேற் கொண்டார் போல, கொண்டார் வெகுடல்,
நகை மேலும் கைப்பாய் விடும்.       (பாடல்: 304)

தம்முடைய பொருளை ஒருவரிடம் கடனாகக் கொடுத்துவிட்டுப் பெற்றவர் காலம் கடந்தும் கடனைத் திருப்பித் தாராது இருக்க, கொடுத்தவர் அவரிடம் சென்று கேட்டால், கடன் வாங்கியவர் சினந்து பேசக்கூடும். அது விளையாட்டாக இருந்தாலும் மனத்திற்குக் கசப்பாகவே இருக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.