பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
ஒரு செயல் முற்றும் முடிந்துவிடுமானால் மேற்கொண்டு தொடர் முயற்சி தேவை இல்லை. எடுத்த செயலை முடிக்காமல் விட்டவர்க்கு வளர்ச்சி இல்லை.
முடிந்ததற்கு இல்லை முயற்சி, முடியாது
ஒடிந்ததற்கு இல்லை, பெருக்கம், வடிந்து அற
வல்லதற்கு இல்லை, வருத்தம், உலகினுள்
இல்லதற்கு இல்லை, பெயர். (பாடல்: 319)
ஒரு செயல் முற்றும் முடிந்துவிடுமானால் மேற்கொண்டு தொடர் முயற்சி தேவை இல்லை. எடுத்த செயலை முடிக்காமல் விட்டவர்க்கு வளர்ச்சி இல்லை. அதுபோல ஒரு செயலைக் குறை இல்லாமல் முடிக்க வல்லவர்க்குத் துன்பம் இல்லை. உலகத்தில் இல்லாத பொருளுக்குப் பெயர் எதுவும் இல்லை.