FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

ராவுத்தன் எனும் முருகன்

குதிரை வீரன் முருகன்: அருணகிரிநாதரின் புகழ்பெற்ற வர்ணனை

Updated On : 25 பிப்ரவரி 2024, 6:17 pm IST
பகிர்:

கந்தர் அலங்காரம் என்பது அருணகிரிநாதப் பெருமான் முருகப்பெருமானைப் பற்றி இயற்றிய நூலாகும். இதில் அருணகிரிநாதர் முருகனை ராவுத்தனே என்று அழைக்கிறார்.

ராவுத்தன் என்ற சொல்லுக்கு குதிரை வீரன் என்பது பொருள் (சில இடங்களில் யானை வீரனையும் சுட்டும்).

திருப்பெருந்துறை ஆத்மநாத சுவாமி கோயிலின் முன்பு ஒரு மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் ஒரு தூணில் குதிரைச் சேவகராக எம்பெருமானின் உருவம் உள்ளது. அது குதிரை ராவுத்தர் என்றும் திருவுருவம் தாங்கி நிற்கும் மண்டபம் குதிரை ராவுத்தர் மண்டபம் என்றும் வழங்கப்பட்டு வருகின்றன. முருகப்பெருமான் மயிலாகிய குதிரையின் மீது ஏறிவந்து போரில் சூரனை அழித்தமையினால் ராவுத்தர் என்னும் பட்டம் அவனுக்குக் கிடைத்தது.

Advertisement

Advertisement

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர்

காமக் கலவிக் கள்ளை

மொண்டுண்டு அயர்கினும் வேல்மற

வேன் முது கூளித்திரள்

டுண்டுண் டுடுடுடு டூ டூ

டுடுடுடு டுண்டுடுண்டு

டிண்டிண் டெனக்கொட்டி ஆடவெஞ்

சூர்க்கொன்ற ராவுத்தனே!

"கற்கண்டைப் போன்ற இனிய சொற்களை உடையவரும் மென்மையானவருமான மகளிர்பால் காம உணர்ச்சியினால் பெறும் கலவியின்பமாகிய கள்ளை எல்லையின்றி நுகர்ந்து யான் செய்ய வேண்டிய கடமைகளை மறந்தாலும், உன் வேலாயுதத்தை மட்டும் மறக்க மாட்டேன். முதிர்ந்த பேய்க் கூட்டங்கள் தமக்கு விருந்துணவு கிடைத்த மகிழ்ச்சியினால் "டுண்டுண் டுடுடுடு ' என்ற ஒலி எழும்படியாக முரசுகளைக் கொட்டிக் கொண்டு கூத்தாடும்படி கொடிய சூரபன்மனைப் போர்க்களத்தில் மயிலாகிய குதிரையின் மீது ஏறிவந்து கொன்று அருளியவனே' என்பது இதன் பொருள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments