நாலடியார்: நாள்தோறும் கழியும் ஆயுள்!
நாள்தோறும் நாட்கழிவானது தவறாது வந்துகொண்டிருக்கக் கண்டும், அதன் உண்மையான இயல்பினை உணர மாட்டார்கள்.
வைகலும் வைகல் வரக்கண்டும், அஃதுணரார்,
வைகலும், வைகலை வைகுமென்று இன்புறுவர்;
வைகலும் வைகற்றம் வாழ்நாள் மேல் வைகுதல்
Advertisement
Advertisement
வைகலை வைத்துணரா தார்.
(பாடல் 39 அதிகாரம்: அறன்வலியுறுத்தல்)
நாள்தோறும் கடந்து போகும் நாட்கழிவைத் தம் வாழ்நாளின்மேல் செல்லுதலாக வைத்து, அந்த நாட்கழிவினைப் பற்றிய உண்மையை அறியாதவர்கள், நாள்தோறும் நாட்கழிவானது தவறாது வந்துகொண்டிருக்கக் கண்டும், அதன் உண்மையான இயல்பினை உணர மாட்டார்கள்.
நாள்தோறும் ஆயுள் கழிந்து போதலை இருக்கிறதென்று தம் அறியாமையால் நினைந்து, அவர்கள் எல்லாரும் அற்ப மகிழ்ச்சியினையே அடைவார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.