தமிழ்மணி

அறக்கேட்டை உணர்ந்தால்...

பழவினையானது வந்து சம்பவித்த காலத்திலே அறிவீனன், கடுமையாகப் பெருமூச்சு விட்டவனாக, தன் மனத்திலே அதனையே நினைந்து நினைந்து தளர்ந்து போவான்.

இணையதளச் செய்திப் பிரிவு

வினைப்பயன் வந்தக்கால், வெய்ய உயிரா,

மனத்தின் அழியுமாம், பேதை; நினைத்ததனைத்

தொல்லையது என்றுணர் வாரே தடுமாற்றத்து

எல்லை இகந்தொருவு வார்.

(பாடல் 33 அதிகாரம்: அறன் வலியுறுத்தல்)

பழவினையானது வந்து சம்பவித்த காலத்திலே அறிவீனன், கடுமையாகப் பெருமூச்சு விட்டவனாக, தன் மனத்திலே அதனையே நினைந்து நினைந்து தளர்ந்து போவான்.

அந்தத் தீவினைப் பயனை ஆராய்ந்து, அது முற்பிறப்பின் அறக்கேட்டால் வந்து சம்பவித்தது என்று உணர்பவர்களே, பிறவித் துயரின் எல்லையை விட்டு நீங்கிப் பேரின்ப நிலையை அடைவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு!! வெள்ளி எவ்வளவு?

தொழிலாளர்கள், விவசாயிகளுடன் நிற்கிறேன்! வேலைநிறுத்தத்துக்கு ராகுல் ஆதரவு!

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்! தமிழகத்தில் பாதிப்பா?

கராச்சி துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி, 5 பேர் காயம்

ஊடகங்களின் முன்னோடி !

SCROLL FOR NEXT