முகப்பு
வெள்ளிமணி

நல்லவைகளை எண்ணுவோம்!

ஓருவனிடம் "தற்பெருமை' குடிகொண்டால், அவன் எவரையும் மதிக்க மாட்டான். உண்மையை மறைக்க முயற்சி செய்வான். எனவே தற்பெருமை மனிதனை இறை நிராகரிப்பில்தான் தள்ளிவிடும் என்பதை நாம் உணர வேண்டும். ""எவனது உள்ளத்தில்

வெள்ளிமணி

நல்லவைகளை எண்ணுவோம்!

ஓருவனிடம் "தற்பெருமை' குடிகொண்டால், அவன் எவரையும் மதிக்க மாட்டான். உண்மையை மறைக்க முயற்சி செய்வான். எனவே தற்பெருமை மனிதனை இறை நிராகரிப்பில்தான் தள்ளிவிடும் என்பதை நாம் உணர வேண்டும். ""எவனது உள்ளத்தில்

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:30 PM
பகிர்:

ஓருவனிடம் "தற்பெருமை' குடிகொண்டால், அவன் எவரையும் மதிக்க மாட்டான். உண்மையை மறைக்க முயற்சி செய்வான். எனவே தற்பெருமை மனிதனை இறை நிராகரிப்பில்தான் தள்ளிவிடும் என்பதை நாம் உணர வேண்டும்.

""எவனது உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ளதோ அவன் சுவனம் புக மாட்டான்'' என நபிகள் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்.

"பெருமை' என்பது இறைவனுக்கு மட்டுமே சொந்தமானது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிய வேண்டியது அவசியமாகும். அதில் எவர் பங்கு பெற எண்ணினாலும் இறைவன் எவரையும் மன்னிக்கவே மாட்டான்.

ஒருவன் உஹது மலை அளவு தங்கத்தை தான் தர்மம் செய்ததாகக் கருதி பெருமையடிப்பானேயானால், அம்மனிதன் செய்த தர்மத்தை இறைவன் ஏற்றுக்கொள்ளவே மாட்டான். தனது மனோ இச்சைப்படி நடப்பது, கஞ்சத்தனம் செய்வது, தற்பெருமை கொண்டு உலகில் வாழ்வது ஆகிய குணங்களைக் கொண்டோரை இறைவன் விரும்பமாட்டான்.

நபி மூஸô (அலை) அவர்கள் காலத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தைக் காண்போம்.

"காரூன்' என்ற கொடியவன் நபி மூஸô (அலை) அவர்களின் சிறிய தந்தை மகனாவான். ஆரம்ப நாள்களில் இவன் நபி மூஸô (அலை) அவர்களை இறைத்தூதராக ஏற்று, "தௌராத்' வேதத்தை நன்கு பயின்று தேர்ச்சி பெற்றான். இவனுடைய ஏழ்மை நிலையைக் கண்டு மனம் இரங்கினார் நபி மூஸô(அலை). எனவே, இரும்பைப் பொன்னாக்கும் "சித்தை' இவனுக்குக் கற்றுக் கொடுத்தார். அதன் பயனாக காரூன் பெரும் செல்வந்தனாக ஆனான். இவனுடைய கரூவூலங்களின் திறவு கோல்களை மட்டும் வலுமிகுந்த பல பேர் சிரமத்துடன் சுமக்க வேண்டியிருந்தது என இறைவன் தனது திருமறையில் கூறுகின்றான். தம் செல்வப் பெருக்கைக் காட்டும் பொருட்டு, இவன், தான் செல்லுமிடமெல்லாம் அவற்றைக் கொண்டு செல்வான். இவனுடைய வள வாழ்வைக் கண்டு, ""காரூனுக்கு வழங்கப்பட்டது போன்று, நமக்கும் இறைவன் வழங்க மாட்டானா? நிச்சயமாக அவன் பெரும் பேறு பெற்றவன்'' என மக்கள் கூறிக் கொள்வர். இது போன்ற சொற்களை இக்காலங்களில்கூட பேராசைக்கொண்ட மக்கள் கூறுவதை நாம் கேட்கலாம்.

இவனுடைய செல்வ செழிப்பைக் கண்ட நபி மூஸô(அலை) அவர்கள், ""நீ "ஜகாத்'(ஏழை வரி) அளிக்கும் தகுதியை அடைந்துள்ளாய். எனவே இவ்வாண்டு முதல் "ஜகாத்' கொடுத்தே ஆக வேண்டும்'' எனக் கட்டளையிட்டார்கள். நல்லவை எதுவும் செய்வது என்பதெல்லாம் அவனுக்குப் பிடிக்காது. ஆகையால், நபி மூஸôவுக்கு எதிராக செயல்படத் தொடங்கினான். அவர் மீது அவதூறைப் பரப்பினான். ஆனால் அது பொய்யென்று நிரூபித்தார் நபி மூஸô(அலை). ""பூமி! காரூனைப் பிடி'' என்று கூறினார். அது இவனை சிறிது சிறிதாக விழுங்கிக்கொண்டு வந்தது. காரூன் ""என்னை மன்னித்தருளுங்கள்'' என எழுபது முறை அலறினான். எனினும் நபி மூஸô (அலை) மனம் இரங்கவில்லை.

இறுதியாக பூமி காரூனை முற்றிலுமாக விழுங்கிவிட்டது. எனவே, யார் ஒருவர் மனோ இச்சைப்படி நடப்பதும்,தான தர்மம் செய்யாது கஞ்சத்தனம் செய்வதும், தற்பெருமை கொண்டு உலகில் வாழ்வதுமாகிய மூன்று வித செயல்களை செய்கிறார்களோ இறைவன் அவர்களை மன்னிக்கவே மாட்டான். கொடியவன் காரூனுக்கு ஏற்பட்ட நிலையைத்தான் இறைவன் தண்டனையாக அளிப்பான் என்பதை உணர்ந்து, உலகில் தாம் வாழும் காலங்களில் நல்லவைகளையே எண்ணி செயல்

படுவோமாக.

முழு கட்டுரையைப் படிக்க →