ஜெபிக்கும் முறைகள்!
மரப்பலகை, மான்தோல், புலித்தோல், கம்பளம், தர்ப்பாசனம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றில் அமர்ந்து ஜெபித்தல் மிகவும் நன்மை தரும்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 11:29 PM
மரப்பலகை, மான்தோல், புலித்தோல், கம்பளம், தர்ப்பாசனம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றில் அமர்ந்து ஜெபித்தல் மிகவும் நன்மை தரும்.
ஜெபிக்கும்போது பத்மாசனம் இட்டு அமர்தல் வேண்டும். வீட்டில், பசு கோட்டம், மலைச்சிகரங்கள், நதிக்கரைகள், ஆலயங்கள் ஆகிய இடங்கள் ஜெபிக்க உகந்த இடங்களாகும்.
கோபம், களிப்பு, கொட்டாவி, தும்மல், நித்திரை, சோம்பல், பேச்சு போன்றவை ஜெபித்தலின்போது கூடாது. ஜெப மாலையில் மணிகள் கொண்டு ஜெபிக்கும் போது உராய்ந்து ஓசைப் படுத்தக் கூடாது.
Advertisement