வெள்ளிமணி

நிகழ்வுகள்

DIN

சிவாலய ஓட்டம்
குரோம்பேட்டை அஸ்தினாபுரம், சிவகாமி நகரிலிருந்து 12- ஆம் ஆண்டு சிவாலய ஓட்டம் மார்ச் 4 -ஆம் தேதி, மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.00 மணிக்கு வந்தடைகிறது. இவ்வாண்டு, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூர், திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழைமையான சிவாலயங்களைத் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: ஒருங்கிணைப்பாளர்: கண்ணன் - 98410 20857.
**************
ஜயந்தி மகோத்ஸவம்
ஸ்ரீ பிரத்யக்ஷ அறக்கட்டளை சார்பில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜயந்தி உத்ஸவம் , திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுக்காவில் உள்ள தண்டலம் கிராமத்தில் பிப்ரவரி 24 -ஆம் தேதி தொடங்கி மார்ச் 3 வரை நடைபெறுகின்றது. இதனையொட்டி, மேற்படி நாள்களில் சூரிய நமஸ்காரம், வேதபாராயணம், சுந்தரகாண்ட பாராயணம், ரிக்வேத சம்ஹித ஹோமம், சகஸ்ர நாம பாராயணம் நடைபெறுகின்றது.
**************
திருவையாறு தியாகப்ரஹ்மத்தின் பிரதம சீடர் ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதரின் 238 -ஆவது ஜயந்தி இசைவிழா, பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால சுவாமி திருக்கோயிலின் எதிர்புறத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கீத மஹாலில் நடைபெறுகின்றது. 
*************
மஹா கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோயிலுக்கும்; திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயிலுக்கும்; வள்ளலார் சுவாமி கோயிலுக்கு வடகிழக்கிலும்; புள்ளிருக்கு வேளூர் வைதீஸ்வரன் கோயிலுக்கு தெற்கேயும்; திருக்கண்ணாயிரமுடையார் குருமாணக்குடி கோயிலுக்கு தென் மேற்கிலும் அண்ணன் பெருமாள் கோயிலுக்கு மேற்கேயும் அமைந்துள்ளது ஜெயமங்கலம் எனப்படும் சேமங்கலம் கிராமம்! இங்கு, ஸ்ரீ பூர்ணபுஷ்கலா சமேத ஹரிஹர புத்திர ஐயனார் திருக்கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். இவ்வாலய திருப்பணிகள் செவ்வனே நடைபெற்று, 24.02.2019, காலை 8.00 - 9.30 மணிக்குள் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 94424 21681/ 99444 40830.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT