ஆடாமல், அசையாமல், சோதனைகளால் தடுமாறாமல் நிச்சலனமாக இருக்கும் பக்தி ஒன்றையே இறைவன் விரும்புகிறார்.
-ஸ்ரீ குருராகவேந்திரர்
யார் பூமியையும் அதில் உள்ள அனைத்தையும் உருவாக்கி இருக்கிறாரோ, மேலே உள்ள விண்ணுலகத்தைத் தாங்கி இருக்கிறாரோ, மூன்றடியால் மூன்று உலகங்களையும் அளந்தாரோ அந்த விஷ்ணுவின் செயல் மகிமைமிக்கது.
-ரிக் வேதம்
நாம் எந்தவிதக் கைம்மாறும் கருதாமல் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். அந்த உதவி வீண் போகாது. அதன் பலன் பெரிய அளவில் நமக்கு மீண்டும் கிடைக்கும் என்பது உறுதியாகும்.
-ஒளவையார்
நீயேதான் எல்லாவற்றிற்கும் மூல காரணமான பரப்பிரம்மம்; நீயேதான் எல்லாவற்றிலும் பரவியுள்ள பரப்பிரம்மம்; நீயேதான் அழிவும் மாறுதல் அற்றதுமான அந்தப் பரப்பிரம்மம்.
-கைவல்ய உபநிஷதம்
தர்மகாரியங்களுக்காகச் செலவு செய்யாமல் தன்னுடைய சுகத்துக்காக சேமித்து வைப்பவன் முட்டாள். அவன் உயிருடன் இருந்தாலும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவனுக்குச் சமம்.
-அக்கினி புராணம்
ஆன்மிக விஷயங்களில் கணவனும் மனைவியும் கருத்து ஒருமித்து இருப்பார்களானால், அவர்களுக்கு ஆன்மிக முன்னேற்றம் மிகவும் எளிதில் ஏற்படும்.
அன்னை ஸ்ரீ சாரதாதேவியார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.