அனந்தமங்கலம் திரிநேத்ர ஆஞ்சநேயர் நெற்றிக்கண் மற்றும் பத்து கரங்களுடன் காட்சியளிக்கிறார். திருக்கடையூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோயில்.
தாயாருடன் ஆஞ்சநேயர்
பெத்தாட்சி விநாயகர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் தனது தாயாரான அஞ்சனா தேவியுடன் காட்சியளிக்கிறார். தேனி பேருந்து நிலையம் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது.
ஆஞ்சநேயரை வணங்கும் ராமர்
வயிரவன்பட்டி வடிவுடையம்மன் சமேத வளரொளி நாதர் கோயிலில் ராமர் ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்லி வணங்குவது போல் அபூர்வ திருக்கோலம் உள்ளது. பிள்ளையார்பட்டி அருகே இக்கோயில் அமைந்துள்ளது.