முகப்பு
உலகம்

நாட்டு மக்கள் காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டாம்: பாகிஸ்தான் அதிபர்

பாகிஸ்தான் நாட்டு மக்கள் காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டாம் என்று அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 13 பிப்ரவரி, 2016 at 4:23 PM
பகிர்:

பாகிஸ்தான் நாட்டு மக்கள் காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டாம் என்று அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்.

காதலர் தினம் கொண்டாடுவது இஸ்லாமியர் மரபு இல்லை என்றும், அது மேற்கத்திய கலாச்சாரம் என்றும் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மம்னூன் ஹுசைன், காதலர் தினம் என்பது நமது கலாச்சாரத்தில் இல்லை, இது புறக்கணிக்கப்பட வேண்டியது என்று குறிப்பிட்டார்.

Advertisement

இந்த மேற்கத்திய கலாச்சாரம், அண்டை நாடுகளில் ஒன்றன் பின் ஒன்றாக பரவி, தற்போது பரவலாக காதலர் தினம் பரவியுள்ளது என்று தெரிவித்தார்.

பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தைக் கொண்டாட பெஷாவர் மற்றும் கோஹட் உள்ளாட்சி அமைப்புகள் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.