முகப்பு
உலகம்

பாகிஸ்தான் ஆளுநரைக் கொன்ற முன்னாள் காவலருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

பாகிஸ்தான் வசம் உள்ள பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் தசீரை கொலை செய்த வழக்கில் அந்நாட்டு முன்னாள் காவலர் மும்தாஸ் கட்ரிக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Updated On : 29 பிப்ரவரி, 2016 at 10:52 AM
பகிர்:

பாகிஸ்தான் வசம் உள்ள பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் தசீரை கொலை செய்த வழக்கில் அந்நாட்டு முன்னாள் காவலர் மும்தாஸ் கட்ரிக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி இஸ்லாமாபாத்தின் கோஹ்சார் சந்தையில் ஆளுநர் தசீரை 28 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார் கட்ரி.

இந்த கொலை வழக்கை விசாரித்து வந்த தீவிரவாத தடுப்பு நீதிமன்றம், கட்ரிக்கு மரண தண்டனை விதித்தது.

Advertisement

இறை சக்தியை நிந்திப்பதை தடுக்கும் பாகிஸ்தான் சட்டத்துக்கு எதிராக தஸீர் கருத்துக் கூறியிருந்ததால் அவரைக் கொன்றதாக வழக்குப் போடப்பட்டது.

இந்த நிலையில், இன்று கட்ரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சிறைச்சாலை உள்ள பகுதியில் கடுமையான பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.