உலகம்

துருக்கி ஆட்சியை கைப்பற்ற நடந்த முயற்சி முறியடிப்பு: அந்நாட்டு அதிபர் அறிவிப்பு

துருக்கியில் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் எரடோகன் அறிவித்துள்ளார்.

PTI

அங்காரா: துருக்கியில் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் எரடோகன் அறிவித்துள்ளார்.

மேலும், துருக்கி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தவர்கள் அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியதிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

துருக்கி ஆட்சியை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பான அசம்பாவிதங்களில் 161 பேர் பலியாகினர்.

இந்த நிலையில், அங்காராவில் உள்ள சாணக்யா மாளிகையில் இருந்து பேசிய அந்நாட்டு பிரதமர் பினாலி யில்டிரிம், துருக்கி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற சிலர் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது.

ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற ராணுவ தலைமை தளபதி ஹூலுசி அகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் 161 பர் பலியாகினர். 1,440 பேர் காயமடைந்தனர்.

துருக்கியின் இறையாண்மையை காக்கும் வகையில் நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிமேகலை விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

அந்தமான்: 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்து

இந்தியா-இஸ்ரேல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடக்கம்

குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு

ஒய்எஸ்ஆா் காங். ஆட்சியில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் மூலம் திருப்பதி லட்டு தயாரிப்பு: சந்திரபாபு நாயுடு

SCROLL FOR NEXT