உலகம்

பிரஸல்ஸ் விமான நிலையத் தாக்குதல்: 21 பேர் பலி

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸின் விமான நிலையத்தில் இன்று பயங்கர சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இரண்டு அடுத்தடுத்து வெடித்தன. இதில் 21 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

IANS

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸின் விமான நிலையத்தில் இன்று பயங்கர சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இரண்டு அடுத்தடுத்து வெடித்தன. இதில் 21 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த குண்டு வெடிப்பில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் மிக பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சி அளித்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

பாரிஸ் தாக்குதல் குற்றவாளி பிரஸல்ஸில் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாளே இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடனே, நாடு முழுவதும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, அடுத்த வெடிகுண்டு ஐரோப்பியன் யூனியன் கட்டடத்துக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டது.

உடனடியாக விமான நிலையமும், ரயில் நிலையமும் மூடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT