முகப்பு
உலகம்

இனி டெஸ்க்டாப்பில் 'சர்ச்' பண்ணாதீங்க! மொபைல்தான் 'டாப்'!

இனி 'கூகிள்' தேடுபொறி இயந்திரத்தை தங்கள் மொபைல் போன் வழியாக பயன்படுத்துபவர்கள், மேசைக்கணினி வழியாக பயன்படுத்துபவர்களை விட, சரியான தகவல்களை பெரும் நிலை உருவாகியிருக்கின்றதது. 

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:46 AM
பகிர்:

லாஸ் வேகாஸ்: இனி 'கூகிள்' தேடுபொறி இயந்திரத்தை தங்கள் மொபைல் போன் வழியாக பயன்படுத்துபவர்கள், மேசைக்கணினி வழியாக பயன்படுத்துபவர்களை விட, சரியான தகவல்களை பெரும் நிலை உருவாகியிருக்கின்றதது. 

தற்பொழுது 'கூகிள்' தேடுபொறி இயந்திரத்தை உங்களது மொபைல் போன் அல்லது மேசைக்ககணினி என எது வழியாக பயன்டுபத்தினாலும் ஒரே வகையான தேடல் முடிவுகள் தான் வந்து கொண்டிருந்தன.

ஆனால் இனிமேல் மொபைல் வழியாக பயன்படுத்துபவர்கள்,  மேசைக்ககணினி வழியாக பயன்படுத்துபவர்களை விட மேம்பட்ட முடிவுகளை பெரும் நிலை உருவாகியிருக்கின்றது. கடந்த வருடம் மே  மாதம் கூகிள்  நிறுவனம் மேற்கொண்ட ஒரு ஆய்வில் கூகிளை மேசைக்கணினி வழியாக பயன்ப்படுத்துபவர்களை விட மொபைல் வழியாக பயபண்படுத்துபவர்களே அதிகம் என்று தெரிய வந்தது.

பெரும்பாலான பழைய இணையதளங்கள்  பயனாளர்கள் தங்கள் மொபைல் போன் வழியாக பார்வையிட ஏதுவாக உருவாக்கப்படவில்லை. எனவே அவற்றை தங்கள் தேடுதல் முடிவுகளில் காட்ட கூகிள் விரும்பவில்லை. எனவே மொபைலில் பார்வையிடுவதற்கு ஏற்ப தங்கள் இணைய தளங்களை மாற்றிக் கொள்ளுமாறு குறிப்பிட்ட நிறுவனங்களை கூகிள் கேட்டுக் கொண்டது.

அதை செயல்படுத்தாவிடில் குறிப்பிட்ட கம்பெனியின் இணைய தள விபரங்கள் மொபைல்போன் வழியாக கூகிள் பயன்படுத்துவோரின் முடிவுகளில் இடம் பெறாது. இதன் மூலம் மேசைக்கணினி வழியாக கூகிளை பயன்படுத்துவோர்,இரண்டாம் தரமாக நடத்தப்படுவது போன்ற நிலை உருவாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →