உலகம்

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி அபாயம் இல்லை

PTI


டோக்யோ: ஜப்பானின் மேற்குப் பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது.

அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டோட்டோரி பகுதியில் மையம் கொண்டு 10 கி.மீ. ஆழத்துக்கு உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

யூரிஹாமா பகுதியில் சில வீடுகள் இடிந்து தரைமட்டமானதாகவும், சில பகுதிகளில் தீ விபத்துகள் நேரிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்சாரம் பாதிக்கப்பட்டதை அடுத்து சுமார் 40 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக புல்லட் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT