உலகம்

பாகிஸ்தானில் ஏற்றப்பட்ட இந்திய தேசியக் கொடி 

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் மற்றும் ஜப்பானில் உள்ள இந்திய தூதரகங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

DIN

நாடு முழுவதும் இன்று 71-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இந்தியாவின் 14-ஆவது குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர். 

இந்நிலையில், இந்தியாவின் 71-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்தியத் தூதர் தேசியக் கொடி ஏற்றினார். அங்கு பணிபுரியும் இந்தியர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

அதுபோலவே, ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்திலும் 71-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

SCROLL FOR NEXT