உலகம்

பாகிஸ்தான் கல்வி நிலைய தாக்குதல் தொடர்பாக 9 பேர் கைது

DIN

பாகிஸ்தானில் வேளாண் பயிற்சி மையத்தில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக 9 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தாதவது:
கைபர் பக்துன்குவா மாகாண தலைநகர் பெஷாவரில் அமைந்துள்ள வேளாண் பயிற்சி மையத்தில் தலிபான் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினர். ஆட்டோவில் பர்கா அணிந்து வந்த மூன்று பயங்கரவாதிகள் வேளாண் கல்வி மைய விடுதிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு மாணவர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 35 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
பின்னர் அதிரடி படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் அந்த மூன்று பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அந்த தாக்குதலில் தொடர்புடைய மேலும் சில நபர்களை கைது செய்யும் வகையில் பத்பேர், டெலாபேண்ட் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன் பயனாக, பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 9 நபர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT