டமாஸ்கஸ்: சிரியாவில் அல் குவைதா ஆதரவு பெற்ற நுஸ்ரா தீவிரவாத முன்னணியினரின் பயிற்சி முகாம்கள் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 பேர் பலியாகினர்.
சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதில் அல் குவைதா இயக்கத்தின் ஆதரவு பெற்ற நுஸ்ரா முன்னணி என்ற தீவிரவாத அமைப்பு முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் சிரியாவின் அலெப்போ மாகாணத்தின் தார் இஸி நகரில் நுஸ்ரா முன்னணியின் பயிற்சி முகாம் மீது அமெரிக் கா தலைமையிலான தீவிரவாத எதிர்ப்பு படைகள் இன்று வான்வழி தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதலில் 100 தீவிரவாதிகள் பலியாகினர் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.