காபூல் ராணுவ மருத்துவமனைக்குள் தற்கொலைப் படைத் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மிகப்பெரிய ராணுவ மருத்துவமனைக்குள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மிகப்பெரிய ராணுவ மருத்துவமனைக்குள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்குள் குண்டுகள் வெடித்ததாகவும், பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
சர்தார் தௌட் கான் மருத்துவமனையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்கொலைப் படை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியவாறு மருத்துவமனைக்குள் நுழைந்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.