உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
உத்தரப் பிரதேசத்தில் உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், புலந்தஷார் மாவட்டத்தின் குர்ஜா நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். சனிக்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில், பலியானவர்கள் அமர்தீப் (30), மனிஷ் (28) மற்றும் ஆகாஷ் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர்.
முதற்கட்ட விசாரணையில், உடற்பயிற்சி கூடத்தில் நடந்த பிறந்தநாள் விழாவில் அறிமுகமானவர்களுக்கு இடையே எழுந்த வாக்குவாதத்தால் இந்தத் தகராறு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. போலீஸ் அதிகாரி கலாநிதி நைதனி கூறுகையில், புகார்கள் மற்றும் முதற்கட்ட தகவல்களின்படி, உடற்பயிற்சிக் கூடத்தில் சில இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. அப்பகுதியில் சோதனைகள் நடந்து வருகின்றன என்றார்.
Advertisement
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டதுடன், இதுவரை இருவரைக் கைது செய்துள்ளதாகவும், மீதமுள்ள சந்தேக நபர்களைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர். இருப்பினும், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் அடையாளங்களை போலீஸார் இன்னும் வெளியிடவில்லை. விசாரணைக்காக வேறு சில நபர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.