உலகம்

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 8 போலீஸார் பலி

தினமணி

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 8 போலீஸார் உயிரிழந்தனர்.
 இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஆப்கனின் மேற்கு ஃபரா மாகாணத்தில் உள்ள காவல் துறை சோதனைச் சாவடிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் திங்கள்கிழமை தாக்குதல் நிகழ்த்தினர். இந்த தாக்குதல் 10-15 நிமிடங்கள் வரை நீடித்தது.
 இதில், 8 போலீஸார் உயிரிழந்தனர். மேலும், ஒரு காவலர் லேசாக காயமடைந்தார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பயங்கரவாதிகள் சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர். எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பேற்கவில்லை. ஆப்கன் முழுவதும் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாகக் கருத இடமிருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

SCROLL FOR NEXT