உலகம்

சிரியாவில் குண்டு வெடிப்பில் கட்டடம் இடிந்து 31 பேர் பலி! 

சிரியாவில் இஸ்லாமிய போராளிக் குழுக்கள் ஆக்கிரமிப்பில் உள்ள இட்லிப் நகரத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், கட்டடம் இடிந்து 31 பேர் பலியாகினர்.

IANS

டமாஸ்கஸ்: சிரியாவில் இஸ்லாமிய போராளிக் குழுக்கள் ஆக்கிரமிப்பில் உள்ள இட்லிப் நகரத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், கட்டடம் இடிந்து 31 பேர் பலியாகினர்.

சிரியாவில் அதிபர் அல் பஷாருக்கு  எதிராக ஆயுதம் ஏந்திய போராளிக் குழுக்கள் போராடி வருகின்றன. அப்படி போராடி வரும் இஸ்லாமிய போராளிக் குழுக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது இட்லிப் நகரம். அங்கு செவ்வாயன்று பெரும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பின் காரணமாக அருகிலிருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் பலியாகினர். இவர்களில் 22 பேர் பொதுமக்கள்; மீதமுள்ள 9 பேர் ராணுவத்தினைச் சேர்ந்தவர்கள்.

'சிரியா சிவில் டிபன்ஸ்' என்னும் தன்னார்வ அமைப்பு இடிபாடுகளிலிருந்து பலியானோரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த தகவல்களை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருடப்பட்ட சோழர் காலச் சிலைகள் மீண்டும் இந்தியாவிடமே ஒப்படைப்பு: அமெரிக்கா

2014 - 22 ஆண்டுகளுக்கான சின்ன திரை விருதுகள் பெறுபவர்கள் யார் யார்? முழு விவரம்!

மருத்துவம், படப்பிடிப்புச் சுற்றுலாவே தொலைநோக்குப் பார்வை! தெலங்கானா அதிகாரி

பொருளாதார ஆய்வறிக்கை ஒரு புதிய பாதையை வகுத்துள்ளது: ஆனந்த் மஹிந்திரா

5 மணி நேரம் 27 நிமிஷங்கள்... வரலாற்றுச் சாதனையுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அல்கராஸ்!

SCROLL FOR NEXT