உலகம்

சிரியாவில் குண்டு வெடிப்பில் கட்டடம் இடிந்து 31 பேர் பலி! 

சிரியாவில் இஸ்லாமிய போராளிக் குழுக்கள் ஆக்கிரமிப்பில் உள்ள இட்லிப் நகரத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், கட்டடம் இடிந்து 31 பேர் பலியாகினர்.

IANS

டமாஸ்கஸ்: சிரியாவில் இஸ்லாமிய போராளிக் குழுக்கள் ஆக்கிரமிப்பில் உள்ள இட்லிப் நகரத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், கட்டடம் இடிந்து 31 பேர் பலியாகினர்.

சிரியாவில் அதிபர் அல் பஷாருக்கு  எதிராக ஆயுதம் ஏந்திய போராளிக் குழுக்கள் போராடி வருகின்றன. அப்படி போராடி வரும் இஸ்லாமிய போராளிக் குழுக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது இட்லிப் நகரம். அங்கு செவ்வாயன்று பெரும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பின் காரணமாக அருகிலிருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் பலியாகினர். இவர்களில் 22 பேர் பொதுமக்கள்; மீதமுள்ள 9 பேர் ராணுவத்தினைச் சேர்ந்தவர்கள்.

'சிரியா சிவில் டிபன்ஸ்' என்னும் தன்னார்வ அமைப்பு இடிபாடுகளிலிருந்து பலியானோரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த தகவல்களை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூளகிரி அருகே எல்லம்மா தேவி கோயிலில் பாலபிஷேக விழா

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

SCROLL FOR NEXT