உலகம்

குடியேற்ற விதிகளில் முறைகேடு: இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ராஜிநாமா 

இங்கிலாந்து குடியேற்ற விதிகளில் முறைகேடு செய்து பலருக்கும் அனுமதி வழங்கியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ஆம்பர் ரூட் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

DIN

லண்டன்: இங்கிலாந்து குடியேற்ற விதிகளில் முறைகேடு செய்து பலருக்கும் அனுமதி வழங்கியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ஆம்பர் ரூட் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இங்கிலாந்தின் பிரதமராக பதவி வகித்து வருபவர் தெரசா மே. இவரது அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக இருந்து வருபவர் ஆம்பர் ரூட். குடியேற்றத் துறையானது உள்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தில் வசிப்பதற்கு குடியுரிமை அளித்தது தொடர்பான பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தனர். அத்துடன் சட்ட விரோதமான முறையில் பலருக்கும் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறி வந்தனர். 

இந்நிலையில் இங்கிலாந்து குடியேற்ற விதிகளில் முறைகேடு புகாரினைத் தொடர்ந்து இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ஆம்பர் ரூட் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக ஆம்பர் ரூட் பிரதமர் தெரசா மேவுக்கு தனது ராஜிநாமா கடிததத்தினை அனுப்பியிருந்தார். ஆம்பர் ரூட்டின் ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்டதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஆதிச்சநல்லூா் மேம்பாடு முதல் பொதிகை மலை வரை.. மத்திய பட்ஜெட்டில் கவனம் பெற்ற தமிழக பகுதிகள்!

2.2.1976: த.நா. முழுதும் கூட்டங்களுக்கு தடை

பட்ஜெட்டில் சொல்லிக் கொள்ளுப்படியாக ஒன்றுமில்லை: திருச்சி சிவா

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT