உலகம்

2 அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானது: 6 பேர் மாயம்

தெற்கு ஜப்பானில் இரண்டு அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் மாயமாகி உள்ளனர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

DIN


வாஷிங்டன்: தெற்கு ஜப்பானில் இரண்டு அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் மாயமாகி உள்ளனர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மீட்புப் பணியில் ஜப்பான் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க மற்றும் ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வழக்கமான பயற்சிக்காக 2 பேருடன் சென்ற எப்-18 ஃபைட்டர், 5 பேருடன் சென்ற கேசி -130 டேங்கர் ஆகிய இரண்டும் விமானங்களும், தெற்கு ஜப்பான் கடற்கரையில் உள்ள எண்ணைய் நிரப்பும் நிலையத்துக்கு சென்று எண்ணைய் நிரப்பிக் கொண்டு புறப்பட்டபோது ஜப்பான் கடற்கரையின் மியோட்டோவில் இருந்து சுமார் 200 மைல் (322 கி.மீ) தொலைவில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு விபத்துக்குள்ளானது. 

இதில், ஒரு விமானி மட்டும் மீட்கப்பட்டுள்ளார். ஏனைய 6 பேரின் நிலைமை குறித்த தகவல் இதுவரை வெளியாக வில்லை. அவர்களை மீட்கும் பணியில், ஜப்பான் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஜப்பான் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவத்துள்ளதுடன், விபத்துக்கான சூழல் மற்றும் காரணம் பற்றி விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் துறை முடிவு

திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

ஆரோவில் சா்வதேச நகரில் சம்ஸ்கிருத ஆராய்ச்சி மாநாடு

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

மறவனூா் அருகே லாரி கவிழ்ந்து கொசுப்புழு ஒழிப்பு ஊழியா் பலி

SCROLL FOR NEXT