உலகம்

2 அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானது: 6 பேர் மாயம்

DIN


வாஷிங்டன்: தெற்கு ஜப்பானில் இரண்டு அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் மாயமாகி உள்ளனர். ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மீட்புப் பணியில் ஜப்பான் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க மற்றும் ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வழக்கமான பயற்சிக்காக 2 பேருடன் சென்ற எப்-18 ஃபைட்டர், 5 பேருடன் சென்ற கேசி -130 டேங்கர் ஆகிய இரண்டும் விமானங்களும், தெற்கு ஜப்பான் கடற்கரையில் உள்ள எண்ணைய் நிரப்பும் நிலையத்துக்கு சென்று எண்ணைய் நிரப்பிக் கொண்டு புறப்பட்டபோது ஜப்பான் கடற்கரையின் மியோட்டோவில் இருந்து சுமார் 200 மைல் (322 கி.மீ) தொலைவில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு விபத்துக்குள்ளானது. 

இதில், ஒரு விமானி மட்டும் மீட்கப்பட்டுள்ளார். ஏனைய 6 பேரின் நிலைமை குறித்த தகவல் இதுவரை வெளியாக வில்லை. அவர்களை மீட்கும் பணியில், ஜப்பான் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஜப்பான் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவத்துள்ளதுடன், விபத்துக்கான சூழல் மற்றும் காரணம் பற்றி விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT