உலகம்

அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வெளியேற்றப்பட்ட ஊழியர்கள் 

அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான சி.என்.என். நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 

DIN

நியூயார்க்: அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான சி.என்.என். நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சி.என்.என் பிரபல செய்தி தொலைக்காட்சி நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக நியூயார்க் உட்பட பல்வேறு இடங்களில் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு  நியூயார்க்கில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசியவர் அலுவலக கட்டிடத்தில் ஐந்து இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.  இதனையடுத்து நிறுவன ஊழியர்கள் அனைவரும் அவசர அவசரமாக கட்டிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். 

உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீ தடுப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டு, அவர்கள் அலுவலகம் முழுவதும் சல்லடை போட்டு தேடிய பின்னர், இந்த வெடிகுண்டு  மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT