உலகம்

பிரான்ஸ் கிறிஸ்துமஸ் சந்தைத் தாக்குதல்: மேலும் ஒருவர் கைது

DIN


பிரான்ஸிலுள்ள புகழ்பெற்ற கிறிஸ்துமஸ் சந்தையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக, மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
ஸ்ட்ராஸ்பர்க் நகரில் கடந்த வாரம் துப்பாக்கிச் சூடு நடத்திய ஷெரீஃப் ஷேகத்தின் சகா ஒருவரை கைது செய்துள்ளோம்.
அந்தத் தாக்குதல் தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
எனினும், 37 வயதான அந்த நபரின் அடையாளத்தை அவர்கள் வெளியிடவில்லை.
பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் அமைந்துள்ள புகழ் பெற்ற கிறிஸ்துமஸ் சந்தையில் ஷெரீஃப் ஷேகத் (29) என்ற நபர் கடந்த செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்திய ஷெரீஃப் ஷேகத்தை போலீஸார் சுட்டுக் கொன்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT