சிட்னி கடல்விமானம் விபத்து: 6 பேர் சாவு
சிட்னியில் கடல் விமானம் விபத்து காரணமாக 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:22 PM
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடல் பகுதியில் கடல் விமானம் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.15 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இதில், விமானி உட்பட 5 பயணிகள் உட்பட 6 பேரும் சம்பவ இடத்திலேயே விமானத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து நியூ சௌத்வேல்ஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது விமானி உட்பட அந்த 5 பயணிகளும் பிரிட்டன் குடிமக்கள் என்று கூறப்படுகிறது.
Advertisement
இருப்பினும், உயிரிழந்தவர்களின் அடையாளம் குறித்து காவல்துறை தரப்பில் இன்னும் தெளிவான விளக்கங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.