உலகம்

கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து பெரும் விபத்து: 52 பேர் உடல்கருகி பலி! 

கஜகஸ்தானின் வட மேற்குப் பகுதியில் வியாழன் அன்று காலை பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்த விபத்தில், அதில் பயணம் செய்த 52 பேர் உடல் கருகி பலியானார்கள்.

IANS

அஸ்தானா: கஜகஸ்தானின் வட மேற்குப் பகுதியில் வியாழன் அன்று காலை பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்த விபத்தில், அதில் பயணம் செய்த 52 பேர் உடல் கருகி பலியானார்கள்.

கஜகஸ்தானின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சமரா - சைம்கேன்ட் சாலை பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.30 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது. கஜகஸ்தானுடன் ரஷ்யாவை இணைக்கும் இந்த சாலையின் வழியாகத்தான், ரஷ்யாவில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்காக கஜகஸ்தான் தொழிலாளர்களை அழைத்துச் செல்வது வழக்கம்.

சம்பவத்தின் பொழுது குறிப்பிட்ட அந்தப் பேருந்தில் இரண்டு ஓட்டுநர்கள்  உட்பட 57 பேர் பயணம் செய்ததாக கஜகஸ்தான் நாட்டு அவசர சேவைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீ விபத்தின் பொழுது அதில் உள்ள 5 பேர் மட்டும் தப்பித்து விட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.      

தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

SCROLL FOR NEXT