உலகம்

கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து பெரும் விபத்து: 52 பேர் உடல்கருகி பலி! 

IANS

அஸ்தானா: கஜகஸ்தானின் வட மேற்குப் பகுதியில் வியாழன் அன்று காலை பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்த விபத்தில், அதில் பயணம் செய்த 52 பேர் உடல் கருகி பலியானார்கள்.

கஜகஸ்தானின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சமரா - சைம்கேன்ட் சாலை பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.30 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது. கஜகஸ்தானுடன் ரஷ்யாவை இணைக்கும் இந்த சாலையின் வழியாகத்தான், ரஷ்யாவில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்காக கஜகஸ்தான் தொழிலாளர்களை அழைத்துச் செல்வது வழக்கம்.

சம்பவத்தின் பொழுது குறிப்பிட்ட அந்தப் பேருந்தில் இரண்டு ஓட்டுநர்கள்  உட்பட 57 பேர் பயணம் செய்ததாக கஜகஸ்தான் நாட்டு அவசர சேவைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீ விபத்தின் பொழுது அதில் உள்ள 5 பேர் மட்டும் தப்பித்து விட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.      

தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - நாகா்கோவில், கொச்சுவேலி வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: அமைச்சரிடம் தந்தை புகாா்

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

SCROLL FOR NEXT