உலகம்

அமெரிக்க முன்னாள் அதிபர் மீது ஷூ வீசியவர் ஈராக் பாராளுமன்ற தேர்தலில் போட்டி 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசிய ஈராக் பத்திரிகையாளரான மண்டேசர் அல்-ஸைதி  அந்நாட்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

DIN

பாக்தாத்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசிய ஈராக் பத்திரிகையாளரான மண்டேசர் அல்-ஸைதி  அந்நாட்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் 2008-ம் ஆண்டு டிசம்பரில் ஈராக் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அப்பொழுது பாக்தாத் நகரில் ஈராக் அதிபருடன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் இடையே ஈராக் பத்திரிகையாளர் மண்டேசர் அல்-ஸைதி திடீரென எழுந்து தனது ஷூக்களை கழற்றி புஷ்-ஐ நோக்கி வீசினார்.

ஆனால் உடனடியாக கீழே குனிந்து புஷ்  ஷூ தாக்குதலில் இருந்து தப்பிவிட்டார். ஈராக்கில் நடக்கும் எல்லா சீரழிவுக்கும் புஷ்தான் காரணம் என்பதால் ஷூவை வீசியதாக அல்-ஸைதி தெரிவித்திருந்தார். விசாரணை முடிவில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் தனது நன்னடத்தையின் காரணமாக 9 மாதங்களிலேயே சிறையிலிருந்து அல்-ஸைதி விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் மண்டேசர் அல்-ஸைதி  தற்பொழுது அந்நாட்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சாத்ர் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட உள்ளேன்; ஊழல் அரசியல்வாதிகளை சிறையில்  தள்ளுவதே எனது இலக்கு. அப்போதுதான் நாடு முன்னேறும்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குள் இனிப்பான செய்தி! மகளிர் உரிமைத் தொகை உயர்கிறதா?

உடற்பயிற்சியின்போது வலியால் துடித்த மின்னல் முரளி பட நடிகை!

அஜித்தைச் சந்தித்த அனிருத்!

அரசியல், அமைப்பு, சமூகத்தை கட்டமைக்கும் கருவி இலக்கியம்: அமைச்சர் கோவி. செழியன்

தமிழகத்தில் என்றுமே கூட்டணி ஆட்சி இல்லை: அமைச்சர் ஐ. பெரியசாமி

SCROLL FOR NEXT