உலகம்

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படை வாகனத்தின் மீது தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்: 22 பேர் பலி 

DIN

காபூல்: ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் பயணம் செய்த வாகனத்தைக் குறிவைத்து தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பராஹ் மாகாணம். அங்குள்ள லஷ் வா ஜூவேன் மாவட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த தாலிபான் தீவிரவாதிகள்  காவல்துறை அதிகாரிகளின் வாகனங்களை குறிவைத்து அதிபயங்கர தாக்குதலை நடத்தினர். 

இந்த தாக்குதல் சம்பவத்தில் மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரி உட்பட 22 அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் மாகாண காவல்துறை துணை தலைமை அதிகாரி உட்பட 5 அதிகாரிகள் பலத்த காயம் அடைந்தனர். 

காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT