உலகம்

முஸ்லிம்கள் என நினைத்து பாதசாரிகள் மீது காரை மோதிய அமெரிக்கர்

ENS

முஸ்லிம்கள் என நினைத்து பாதசாரிகள் மீது அமெரிக்கர் காரை மோதிய விபத்தில் 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான் ஃப்ரான்ஸிஸ்கோ நகரின் அருகிலுள்ள சன்னிவைல் பகுதி போலீஸார் இதுகுறித்து கூறுகையில்,

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த இசையா (34) என்பவர் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை முஸ்லிம்கள் என்று நினைத்து தனது காரை கொண்டு மோதியுள்ளார்.

இதில் தந்தை, மகன் மற்றும் மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அந்த ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே படுகாயமடைந்த அந்த குடும்பத்தினர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT