உலகம்

பாகிஸ்தான்: மழைக்கு 42 பேர் பலி

DIN


பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக, அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான கராச்சியில் 42 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: பாகிஸ்தானில் பருவமழைக் காலம் கடந்த ஜூலை மாத இறுதி வாரத்தில் தொடங்கியது.
இந்த நிலையில், கராச்சி நகரில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த மழையால் ஏற்பட்ட விபத்துகளில் 24 பேர் உயிரிழந்தனர். கராச்சி நகரம் அமைந்துள்ள சிந்து மாகாணத்தில் ஒட்டுமொத்தமாக 28 பேர் உயிரிழந்தனர். இத்துடன், இந்த பருவமழைக் காலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42-ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் பலர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அந்த விபத்துகளுக்கு கராச்சி மின் வாரியம்தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் சார்பாக கராச்சி மேயர் அலுவலகம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துளிகள்...

மஞ்சள், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களின் விலை உயா்வு

கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்: அன்புமணி

கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா? உ.பி.யில் அமித் ஷா பிரசாரம்

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT