உலகம்

காஸா: 3 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொலை

DIN

காஸா பகுதியில் 3 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
இஸ்ரேல் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்; மேலும் ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா எல்லைக்கு அப்பாலிருந்து இஸ்ரேல் ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் பீரங்கியை நோக்கி சிலர் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதற்குப் பதிலடியாகவே தங்களது வீரர்கள் திருப்பிச் சுட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் கட்டுப்பாட்டிலுள்ள காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது 3 ஏவுகணைகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் நடைபெற்றதாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ஏவுகணைத் தாக்குதலால் உயிர்ச் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT