உலகம்

சீனாவில் கனமழை: 10 பேர் பலி; 27 பேர் மாயம்

DIN

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்தனர்; 27 பேரைக் காணவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
சிச்சுவான் மாகாணம், வென்சுவான் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்தனர்; 27 பேரைக் காணவில்லை.
நிலச்சரிவில் குடிநீர் இணைப்புக் குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டதால் 58,000 பேர் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.
மேலும், ஆபத்தான பகுதிகளில் சிக்கியுள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் 1,630 மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT