உலகம்

ரஷியா துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு அதிகாரி சுட்டுக்கொலை

DIN

ரஷிய பாதுகாப்புத்துறை (எஃப்.எஸ்.பி) அதிகாரி மாஸ்கோ நகரத்தின் மத்தியப் பகுதியில் வியாழக்கிழமை (உள்ளூர் நேரப்படி)  நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்று டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தி மர்ம நபரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற மாஸ்கோவின் மத்தியப் பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்று வழியில் அனுமதித்து மாஸ்கோ போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மர்ம நபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மாஸ்கோ போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT