முகப்பு
உலகம்

ஹெலிகாப்டர் விபத்தில் நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் பலி 

நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் ரபீந்திரா அதிகாரி புதனன்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:15 AM
பகிர்:

காத்மாண்டு: நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் ரபீந்திரா அதிகாரி புதனன்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.

நேபாள நாட்டின் டேராதும் மாவட்டத்தில் புதன்கிழமையன்று அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரபீந்திரா  அதிகாரி உள்பட 7 பேர் ஒரு ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.

அப்போது எதிர்பாரத விதமாக அந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் அமைச்சர் ரபீந்திரா மற்றும் உடன் பயணித்த ஆறும் பேரும் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →