உலகம்

பயங்கரவாதத் தாக்குதல்: பாகிஸ்தானில் 9 பேர் பலி

DIN

பாகிஸ்தானில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டிலும், பெண் நடத்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலிலும் 6 போலீஸார் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
மாகாணத் தேர்தல் நடந்து முடிந்துள்ள கைபர் பக்துன்கவாவின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த 4 மர்ம நபர்கள் இரு காவலர்கள் மீது ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் இரு காவலர்களும் உயிரிழந்தனர்.
அவர்களது உடல்கள் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோது, அந்த மருத்துவமனையின் நுழைவு வாயிலுக்கு பர்தா அணிந்து வந்த பெண் தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
இதில் 4 போலீஸார் உள்பட 7 பேர் பலியாகினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பகுதியில் பெண் மூலம் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT