உலகம்

வெட்டுக்கிளிக்காக ஒன்றிணைந்த இந்தியா, பாகிஸ்தான்

DIN

வெட்டுக்கிளி வகைப் பூச்சிகளின் வரவுக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தான் ஒன்றிணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கடந்த 1993-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது மீண்டும் வெட்டுக்கிளிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இவை பாகிஸ்தானில் இருந்து அதிகளவில் இங்கு இடம்பெயர்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து இரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முனபோ கிராமத்தில் ஜூன் 19-ஆம் தேதி சிறப்புக் கூட்டம் நடத்தினர். அப்போது வெட்டுக்கிளி தொல்லையை குறைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பூச்சிகள் கட்டுப்பாட்டுத்துறையைச் சேர்ந்த மகேஷ் சந்திரா கூறுகையில், 

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் அனைத்து கருவிகளும் தயார் நிலையில் உள்ளது. அதற்கான பயிற்சிகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது.

ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

எனவே அதை தடுப்பதற்கான பிரத்தியேக மருத்துகளும் போதிய அளவு உள்ளன. தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செலவுத் தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனம் புகாா்தாரருக்கு ரூ. 1.61 லட்சம் வழங்க உத்தரவு

வெப்ப அலை: வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணி போலீஸாருக்கு பழச்சாறு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி விழா

கா்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

SCROLL FOR NEXT