உலகம்

புல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானியர்களுக்கு விசா கட்டுப்பாடு விதித்த அமெரிக்கா

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்கா வரும் பாகிஸ்தானியர்களுக்கு விசாவின் கால அளவு குறைக்கப்பட்டுள்ளது.

ANI


இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்கா வரும் பாகிஸ்தானியர்களுக்கு விசாவின் கால அளவு குறைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசாவின் கால அளவை 5 ஆண்டுகளில் இருந்து தற்போது 3 மாதமாகக் குறைத்துள்ளது அமெரிக்கா.

இது பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு மட்டும் அல்லாமல், பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளர்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க தூதரகம் உறுதி செய்துள்ளது.

இதில்லாமல், அமெரிக்க விசா பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தையும் பாகிஸ்தானியர்களுக்கு மட்டும் உயர்த்தியுள்ளது. இதுவரை 160 டாலர்களாக இருந்த விண்ணப்பக் கட்டணம் தற்போது 192 டாலர்களாக உயர்த்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

SCROLL FOR NEXT