முகப்பு
உலகம்

எத்தியோப்பியாவில் விமான விபத்து: பயணிகள் உட்பட 157 பேர் பலி? 

எத்தியோப்பியாவில் ஞாயிறன்று நிகழ்ந்த விமான விபத்தில் பயணிகள் உட்பட 157 பேர் பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:20 AM
பகிர்:

அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவில் ஞாயிறன்று நிகழ்ந்த விமான விபத்தில் பயணிகள் உட்பட 157 பேர் பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு ஞாயிறு நண்பகல் விமானம் ஒன்று புறப்பட்டது.

அந்த விமானத்தில் விமானப் 8 பணியாளர்கள் மற்றும் 149 பயணிகள் என மொத்தம் 157 பேர் பயணம் செய்துள்ளனர்.

விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களிலேயே கட்டுப்பட்டு மையத்துடனான தொடர்பை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேற்கொண்டு தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.