சீனாவில் சுற்றுலா பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 26 பயணிகள் உயிரிழந்தனர்.
சீனாவில் ஹூனான் மாகாணத்தில் 53 பயணிகளுடன் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த சுற்றுலா பேருந்து நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் 26 பயணிகள் உயிரிழந்தனர்.
காயமடைந்த 28 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுனர் 2 பேரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.