மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2014-16-ஆம் ஆண்டில், அந்த உயிர்க் கொல்லி நோயால் 11,300 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு தற்போதுதான் அந்த நோயின் பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள சூழல் மிகவும் அபாயகரமானது என்றும், இதுதொடர்பாக தீவிர நடவடிககைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.