உலகம்

வடகொரிய அணுஆயுதச் சோதனைகளுக்கு அமெரிக்கா புது விளக்கம்!

ANI

அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரிய அதிபர் கடந்த ஆண்டு அறிவித்ததற்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏவுகணை சோதனைகள் மற்றும் ராணுவ ஒத்திகைகளை அந்த நாடு மீண்டும் தொடங்கியுள்ளதால் பிராந்தியப் பதற்றம் அதிகரித்துள்ளது. 

இதையடுத்து, வட கொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை மீறிய அந்த நாட்டு சரக்குக் கப்பலை சிறைபிடித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. வட கொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை விவகாரத்தில், அந்த நாட்டுடன் இதுபோன்ற நேரடி மோதலில் அமெரிக்கா ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில், வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் மற்றும் ராணுவ ஒத்திகைகள் ஆகியவை நம்பகத்தன்மைக்கு எதிரான செயல் கிடையாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

கண்களே தியான மண்டபம்...!

பேஸ்பாலாக மாறிவரும் கிரிக்கெட்: சாம் கரண் நெகிழ்ச்சி!

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

SCROLL FOR NEXT