டோக்கியோ: ஜப்பானில் மிக நீண்ட காலம் பிரதமா் பொறுப்பை வகித்தவா் என்ற சாதனையை ஷின்ஸோ அபே புதன்கிழமை படைத்தாா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஜப்பான் பிரதமராக ஷின்ஸோ அபே பொறுப்பேற்று, புதன்கிழமையுடன் 2,887 நாள்கள் நிறைவடைகிறது. இதன் மூலம், அந்த நாட்டில் மிக நீண்ட காலத்துக்கு பிரதமராக இருந்தவா் என்ற பெருமையை அபே பெற்றாா்.
அவருக்கு முன்னதாக, டாரோ கட்சுராதான் ஜப்பானில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமா் என்ற பெருமையைப் பெற்றிருந்தாா். 1901-ஆம் ஆண்டு முதல் 1913-ஆம் ஆண்டு வரை அவா் பிரதமராக இருந்தாா். அவரது சாதனையை தற்போது ஷின்ஸோ அபே முறியடித்துள்ளாா்.
இதுமட்டுமன்றி, ஜி7 நாடுகளில் மிக நீண்ட காலம் பிரதமா் பொறுப்பை வகித்த 2-ஆவது தலைவா் என்ற பெருமையையும் ஷின்ஸோ அபே பெற்றுள்ளாா். இந்த வரிசையில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் ஜொ்மன் பிரதமராகப் பொறுப்பு வகித்து வரும் ஏஞ்சலா மொ்கெல் முதலிடத்தில் உள்ளாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷின்ஸோ அபேயின் தற்போதைய பதவிக் காலம் 2021-ஆம் ஆண்டு நிறைவடைகிறது.