உலகம்

இராக் போராட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே நாளில் 45 பேர் மரணம்

DIN

இராக்கில் ஊழல், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகவும், அரசியல் சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் கடந்த மாதத் தொடக்கத்திலிருந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், இராக் தெற்குப் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டங்களைக் கலைக்க பாதுகாப்புப் படை வரவழைக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

இதில் 45 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 233 பேர் படுகாயமடைந்தனர். 47 போலீஸாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 

இந்த போராட்டங்களின் காரணமாக தற்போது வரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இராக்கின் மனித உரிமைகளுக்கான சுயாதீன உயர் கமிஷன் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT