உலகம்

இத்தாலியத் தீவு ஒன்றில் அகதிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி 

PTI

மிலன்: இத்தாலிய நாட்டுத் தீவு ஒன்றில் அகதிகள் பயணம் செய்த படகு கவிழ்ந்து 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு கடற்படை திங்களன்று தெரிவித்துள்ளதாவது:

சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்துகொண்டிருந்த குறிப்பிட்ட படகானது,  இத்தாலியின் லம்பெடுசா தீவிலிருந்து 6 மைல் தொலைவில் நள்ளிரவில் கடலில் கவிழ்ந்தது.

தகவல் அறிந்து அங்கு வந்த ரோந்து கப்பலானது இதைக் கண்டு நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இந்த விபத்தில் அந்த படகில்பயணம் செய்த 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 22 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள்.      

வேறு சில தகவல்களின்படி குறிப்பிட்ட கப்பலில் சுமார் 50 பேருக்கு மேல் பயணம் செய்தார்கள் என்றும் தெரியவந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அத்திப்பட்டி பகுதியில் மதுக் கடைகள் அடைப்பு

மதுரை குடிநீா் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: ஏற்பாட்டாளா்கள் தலைமறைவு

வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம்

தமிழக ஆளுநா் தில்லி பயணம்

SCROLL FOR NEXT