முகப்பு
உலகம்

தோழியைக் காப்பாற்ற முதலையுடன் சண்டையிட்டு அதன் கண்களைத் தோண்டிய சிறுமி.. 

ஸிம்பாப்வேயில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தனது தோழியை கடித்து இழுத்துச் சென்ற முதலையுடன் சண்டையிட்டு அதன் கண்களைத் தோண்டி தோழியைக் காப்பாற்றிய சிறுமியை உலகமே பாராட்டி வருகிறது.

Updated On : 30 அக்டோபர், 2019 at 3:41 PM
girl wrestles crocodile
பகிர்:


ஹராரே: ஸிம்பாப்வேயில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தனது தோழியை கடித்து இழுத்துச் சென்ற முதலையுடன் சண்டையிட்டு அதன் கண்களைத் தோண்டி தோழியைக் காப்பாற்றிய சிறுமியை உலகமே பாராட்டி வருகிறது.

சின்டிரெல்லா கிராமத்தில் 9 வயது சிறுமி லடோயா முவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு முதலை அவளை இழுத்துச் சென்றது. அப்போது அவளுடன் குளித்துக் கொண்டிருந்த ரெபேக்கா என்ற சிறுமி, தனது தோழியைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த முதலை மீது தாவி அமர்ந்துள்ளார். 

முதலையுடன் சண்டையிட்டு, அதன் கண்களை கைகளால் தோண்டியிருக்கிறார். அது தனது தோழியை பிடித்து வைத்திருப்பதை விடும் வரை அவர் முதலையை தாக்கியுள்ளார். ஒரு வழியாக வலி தாங்க முடியாத முதலை  லடோயாவை விட்டுவிட்டு வந்த வழியில் ஓடியது.

Advertisement

தோழியைப் பிடித்தபடி ரபேக்கா கரை வந்து சேர்ந்தார். ரபேக்காவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் லடோயாவுக்கு ஏற்பட்ட காயத்துக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.